உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து மேஸ்திரி தற்கொலை

Published On 2023-04-15 14:18 IST   |   Update On 2023-04-15 14:18:00 IST
  • நீண்ட நாளாக வயிற்றுவலி பிரச்சனை இருந்துள்ளது.
  • மனவேதனை அடைந்த குமரேசன் 14-ம் தேதி விஷம் குடித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் மோட்டுகொள்ளை பகுதியைச் சேர்ந்த மேஸ்திரி குமரேசன்( 41),

இவருக்கு நீண்ட நாளாக வயிற்றுவலி பிரச்சனை இருந்துள்ளது. இதனால் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை .இதனால் மனவேதனை அடைந்த குமரேசன் 14-ம் தேதி விஷம் குடித்துள்ளார்.

இதனைப் பார்த்த அவரது மனைவி கலைவாணி மற்றும் உறவினர்கள் உடனடியாக சிகிச்சைக்காக பாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் குமரேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News