உள்ளூர் செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

Published On 2023-04-17 14:52 IST   |   Update On 2023-04-17 14:52:00 IST
  • ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்). சார்பில் கருங் கல்பட்டி பாண்டுரங்கன் விட்டல் 2-வது தெருவில் நேற்று மாலை 4.25 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது.
  • ஊர்வலத்தின் முன்பும், பின்பும், சாலையின் 2 ஓரமும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்றது.

ேசலம்:

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து சேலம் ஜில்லா ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்). சார்பில் கருங் கல்பட்டி பாண்டுரங்கன் விட்டல் 2-வது தெருவில் நேற்று மாலை 4.25 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது.

கிருஷ்ணம்மாள் நகர், கருங்கல் பட்டி பிரதான சாலை, பிரபாத், எம்.ஜி.ஆர். வளைவு, திருச்சி பிரதான சாலை வழியே வந்த ஊர்வலம் தாதகாப்பட்டி கேட் மைதானத்தில் 5 மணிக்கு நிறைவடைந்தது. ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே சீருடையில் அணிவகுத்து சென்றனர்.

ஊர்வலத்தின் முன்பும், பின்பும், சாலையின் 2 ஓரமும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்றது. அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடாமல் இருக்க ஊர்வல பாதையில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News