உள்ளூர் செய்திகள்

வீட்டை விட்டு மாயமானவர் கிணற்றில் பிணமாக மீட்பு

Published On 2022-10-03 09:42 GMT   |   Update On 2022-10-03 09:42 GMT
  • அருகில் இருந்தவர்கள் உங்களது தந்தை குடிபோதையில் சைக்கிள் எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறினர்.
  • இது குறித்த தகவலின் பெயரில் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த சாணார்பாளையம் ஆண்டாள் நகரை சேர்ந்தவர் ராமசாமி(52).

இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு தேவி, லாவண்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சரோஜா கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ராமசாமி மட்டும் ஆண்டாள் நகரில் தனியாக வசித்து வந்தார். தேவி, லாவண்யா தினமும் தந்தையிடம் போனில் பேசி வந்தனர்.

எங்களின் கடந்த 28-ந் தேதி மகள்கள் இருவரும் தந்தைக்கு போன் செய்தனர். ஆனால் போனை அவர் எடுக்கவில்லை. இதனை அடுத்து மகள்கள் இருவரும் ஆண்டாள் நகருக்கு வந்து விசாரித்த போது அருகில் இருந்தவர்கள் உங்களது தந்தை குடிபோதையில் சைக்கிள் எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறினர்.

இதையடுத்து தந்தையை பல்வேறு இடங்களில் தேடினர். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி தாட்டரவலசு, கருக்கன் காட்டு தோட்டம் பகுதியில் உள்ள கிணற்றில் ராமசாமி பிணமாக கிடந்தார்.

இது குறித்த தகவலின் பெயரில் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ராமசாமி குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News