உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபரை குத்தி கொன்றவர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2023-11-09 07:03 GMT   |   Update On 2023-11-09 07:03 GMT
  • கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபரை குத்தி கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
  • எஸ்.பி பிரிந்துரையின் பேரில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் டொம்பு சேரி கிழக்குதெருவை சேர்ந்தவர் ராஜா(33). இவர் கோவையில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவரது அண்ணன் மருத முத்துவின் மனைவிக்கும், டொம்புசேரியை சேர்ந்த பிரவீன்(24) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

இதனை ராஜா கண்டித்து வந்துள்ளார். இருந்தபோதும் அவர்களது கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. இதனால் கடந்த 26.8.23-ந்தேதி ராஜாவுக்கும், பிரவீனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன் கத்தியால் ராஜாவை குத்தி கொன்றார்.

இதனையடுத்து பழனி செட்டிபட்டி போலீசார் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பிரவீன் மீது குண்டர்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை கலெக்டர் ஏற்றுக்கொ ண்டதை தொடர்ந்து பிர வீன் குண்டர் தடுப்பு சட்ட த்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News