உள்ளூர் செய்திகள்

இறந்தவர் உடலை வயல்வெளியே தூக்கிச்செல்லும் கிராமமக்கள்.

இறந்தவர் உடலை வயல் வழியே தூக்கிச்செல்லும் அவலம்

Published On 2022-11-15 08:15 GMT   |   Update On 2022-11-15 08:15 GMT
  • மயானத்துக்கு செல்ல பல ஆண்டுகளாக சாலை வசதி கிடையாது.
  • பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை.

மெலட்டூர்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா இரும்புதலை கீழ ஆதிதிராவிடர்தெரு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ள மயானத்துக்கு பல ஆண்டுகளாக சாலை வசதி கிடையாது.

இதனால் கிராமத்தில் ஒருவர் இறந்தால் வயல்வெளி வழியே உள்ள வயல்வரப்பு பாதையில் சேறும் சகதியுமாக உள்ள மண் சாலை வழியாக தான் கொண்டு செல்ல வேண்டும்.

சாலை வசதி கேட்டு பல முறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே அவதியடைந்து வருகின்றனர்.

பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை. எனவே உடனடியாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News