உள்ளூர் செய்திகள்

கிணற்றில் விழுந்து விவசாயி பலி

Published On 2022-09-09 15:03 IST   |   Update On 2022-09-09 15:03:00 IST
  • தோட்டத்தில் இருந்த கிணற்றில் அவர் தவறி விழுந்தார்.
  • பாஸ்கரனுக்கு நீச்சல் தெரியாது. எனவே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தாலுகா அம்மனேரி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 32).

விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிற்கு சென்றார். அப்போது அந்த தோட்டத்தில் இருந்த கிணற்றில் அவர் தவறி விழுந்தார்.

பாஸ்கரனுக்கு நீச்சல் தெரியாது. எனவே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து பாஸ்கரனின் மனைவி வளர்மதி தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News