உள்ளூர் செய்திகள்

செம்பு கம்பிகள் திருடு போன புதிய மின்மாற்றி.

மின்மாற்றியில் உள்ள செம்புக்கம்பிகள் திருட்டு

Published On 2023-09-24 10:02 GMT   |   Update On 2023-09-24 10:02 GMT
  • செம்பு கம்பியின் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.
  • மின்மாற்றி உடைக்கப்பட்டு அதில் இருந்த செம்புக்கம்பி திருடு போனது.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை கிராமத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் காரங்குடா செல்லும் சாலையின் இடதுபுறத்தில் சுடுகாடு உள்ளது.

இதன் அருகே விவசாய நிலங்கள், தென்னந்தோப்புகள் உள்ளன.

இப்பகுதியில், விவசாயிகளின் மின்மோட்டார்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு மின் வாரியம் சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவதன்று அதிகாலை இப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.

இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, மின்மாற்றி உடைக்கப்பட்டு அதில் இருந்த செம்புக்கம்பி (காயில்) திருட்டுப்போனது தெரியவந்தது.

இதன்மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.

இது குறித்து நாடியம் உதவி மின் பொறியாளர் சிவசங்கர் சேதுபாவா சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் மின்மாற்றியில் செம்புக்கம்பி களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News