உள்ளூர் செய்திகள்

கமர்சியல் நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரனாத் பன்டாரி திறந்து வைத்த காட்சி.

சேலத்தில் கமர்சியல் நீதிமன்றம் இன்று திறப்பு

Published On 2022-07-03 08:09 GMT   |   Update On 2022-07-03 08:09 GMT
  • சேலம் அஸ்தம்பட்டியில்உ ள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கமர்சியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.
  • கமர்சியல் நீதிமன்றம் சென்னையில் திறக்கப்பட்டு உள்ளது. 2-வதாக சேலத்தில் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம்:

சேலம் அஸ்தம்பட்டியில்உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடும்பநல நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அதற்கு பின்பகுதியில் கமர்சியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.

இதனை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரனாத் பன்டாரி திறந்து வைத்தார். பின்னர் குத்து விளக்கேற்றி நீதிமன்றத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு நடந்த வழக்கு விசாரணை பார்வையிட்டார்.

அவருடன் உயர் நீதிமன்ற நீதிபதிகள், சுந்தர், அனிதாசுமந்த், கார்த்திகேயன் சதீஷ்குமார், அப்துல்குத்தூஸ், இளந்திரையன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக நீதிபதி முனீஸ்வரனாத் பன்டாரியை சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஏற்கனவே கமர்சியல் நீதிமன்றம் சென்னையில் திறக்கப்பட்டு உள்ளது.

2-வதாக சேலத்தில் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவை, காஞ்சிபுரத்தில் கமர்சியல் நீதிமன்றம் திறக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News