உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு கலெக்டர் கார்மேகம் பாராட்டு தெரிவித்த காட்சி.

பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டிய கலெக்டர்

Published On 2023-02-07 14:43 IST   |   Update On 2023-02-07 14:43:00 IST
  • குடியரசு தின விழாவில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
  • கலெக்டர் கார்மேகம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இப்பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சேலம்:

சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜனவரி 26-ந்தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் மணக்காடு காமராஜர் நகரவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 320 மாணவிகள் கோலாட்டம் மையக் கருத்தையும், அபிநவம் ஏகலைவா மாதிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 200 மாணவிகள் மலைவாழ் மக்கள் நடனமும், குண்டுக்கல்லூர் நோட்டர் டேம் ஆப் ஹோலி கிராஸ் பள்ளியை சேர்ந்த 366 பள்ளி மாணவ, மாணவியர்கள் எனது இந்தியா என்ற தலைப்பிலும் நடனமாடினர்.

மேலும், குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 370 மாணவியர்கள் சேலம் வரலாறு சம்பந்தமான பாடலுக்கும், பெருமாள் மலை ரோடு ஸ்ரீ சைதன்யா பள்ளி 326 மாணவ, மாணவியர்கள் விவசாயம் சம்பந்தமான பாடலுக்கும், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 257 மாணவ, மாணவியர்கள் நெகிழி பயன்படுத்துவதை தவிர்த்தல் சம்பந்தமான பாடலுக்கும், நெத்திமேடு ஜெயராணி மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 335 மாணவ, மாணவியர்கள் பெண் கல்வி சம்பந்தமான பாடலுக்கும், அரிசிபாளையம் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 250 மாணவ, மாணவியர்கள் செந்தமிழ்நாடு சம்பந்தமான பாடலுக்கும் என மொத்தம் 2,424 பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கருத்துருக்களை உள்ளடக்கிய இக்கலைநிகழ்ச்சிகள் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. இவர்களின் கலை மற்றும் சமுதாய பற்றினை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இப்பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்ட பள்ளிக்–கல்வித்துறை அலுவலர்ள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News