உள்ளூர் செய்திகள்

தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-09-27 09:11 GMT   |   Update On 2022-09-27 09:11 GMT
  • புதிய வடிவமைப்புகளில் சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • நடப்பாண்டு தீபாவளிக்கு ரூ.13 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தமிழக அரசின் கூட்டு றவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்து தனது விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சீபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டு உள்ளன.

தஞ்சாவூர் வைரைம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2022 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

கடந்த தீபாவளி 2021 பண்டிகை காலத்தில் தஞ்சாவூர் மண்டலத்தில் ரூ.7 கோடியே 49 லட்சத்து 15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.13 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளிக்கு ரூ.1 கோடியே 44 லட்சத்து 23-க்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.1 கோடியே 70 லட்சத்துக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், "கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்பட்டு, 11- வது மற்றும் 12 -வது மாத சந்தா தொகையை கோ- ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்சவேணி,

மேலாளர் (ரகம் மற்றும் பகிர்மானம்எம்.அ ன்பழகன் ,அரசு அலுவல ர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர்கள் எம்.ஸ்ரீதர், ஆர்.சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News