உள்ளூர் செய்திகள்

நெல் கொள்முதல் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

Published On 2023-01-30 09:23 GMT   |   Update On 2023-01-30 09:23 GMT
  • அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தண்ணீர் தேக்கம்.
  • தற்போது அறுவடை நேரத்திலும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் வேதனை.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் தற்போது வரை 85 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 19 மில்லி மீட்டர், செம்பனார்கோவிலில் 15.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேலும் மயிலாடுதுறையில் 8.60 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது.

காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் தற்காலிகமாக பல்வேறு பகுதிகளில் கொள்முதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நல்லத்குடி,கோடங்குடி ஆனந்ததாண்டவபுரம், சேத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்முதல் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

சம்பா சாகுபடி தொடங்கும் காலத்தில் மழை பெய்ததால் விளைச்சல் பாதித்து தற்போது அறுவடை நேரத்திலும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

Tags:    

Similar News