உள்ளூர் செய்திகள்

கோவையில் வாலிபர் நீரில் மூழ்கி பலி

Published On 2023-01-08 08:53 GMT   |   Update On 2023-01-08 08:53 GMT
  • சத்தியமூர்த்தி சலூன் கடை வைத்து நடத்தி வந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 32). இவர் அதே பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று சத்தியமூர்த்தி மது குடித்தார். பின்னர் குடிபோதையில் சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றார்.

அங்கு கிணற்றில் குளித்து கொண்டு இருந்த போது திடீரென நீரில் மூழ்கி தத்தளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

ஆனால் அதற்குள் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சத்தியமூர்த்தியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் சிஞ்சுவாடிைய சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தெய்வானை (வயது 35). கூலி தொழிலாளி.

இவர் தனது கணவரை பிரிந்து அண்ணன் வீட்டில் இருந்து வந்தார். மேலும் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று தெய்வானை லஷ்மாபுரம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றார்.

அப்போது திடீரென அவருக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டு இருந்த தண்ணீர் தொட்டியில் சுருண்டு விழுந்தார். அதில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் தெய்வானை நீரில் மூழ்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுகுறித்து கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவி க்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போ லீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News