உள்ளூர் செய்திகள்

கொதிக்கும் சுடுதண்ணீர் கொட்டியதில் வாலிபர் சாவு

Published On 2023-04-19 10:06 GMT   |   Update On 2023-04-19 10:06 GMT
  • கம்பெனியில் வேலை பார்த்தபோது பிளாண்ட்டில் இருந்து சுடு தண்ணீர் எதிர்பாராதவிதமாக ஆதித்தியாகுரான் மீது கொட்டியது.
  • சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேடரபள்ளி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஆதித்தியாகுரான் (வயது19). இவர் ஓசூர் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று கம்பெனியில் வேலை பார்த்தபோது பிளாண்ட்டில் இருந்து சுடு தண்ணீர் எதிர்பாராதவிதமாக ஆதித்தியாகுரான் மீது கொட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவரை உடன் பணிபுரியும் ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News