உள்ளூர் செய்திகள்
பூச்சி மருந்து குடித்த இளம்பெண் சாவு
- தருமபுரிநேற்று பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார்.
- சிகிச்சை பலனின்றி இன்றுஅதிகாலை அம்பிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள புதுக்கரம்பூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் சென்னையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அம்பிகா (வயது24). இவர் நேற்று பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சை க்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுஅதிகாலை அம்பிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.