உள்ளூர் செய்திகள்

எலிபேஸ்ட் தின்ற இளம்பெண் சாவு

Published On 2023-06-09 09:45 GMT   |   Update On 2023-06-09 09:45 GMT
  • விமலா எலிபேஸ்ட் தின்று உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
  • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விமலா பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்துள்ள பொம்மனூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி விமலா (வயது28). இந்த நிலையில் விமலா எலிபேஸ்ட் தின்று உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று விமலா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News