உள்ளூர் செய்திகள்

கடன் தொல்லையால் ஆசிரியர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-09-30 15:54 IST   |   Update On 2023-09-30 15:54:00 IST
  • அரசு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
  • நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரஹ்மத் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது41). இவர் சூலகுண்டா பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அதிக அளவில் கடன் ஏற்பட்டுள்ளது.

இதனால் மன வேதனை அடைந்த மணிகண்டன் கடந்த 28 ந்தேதி வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு ராயக்கோட்டை அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி பானுப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News