உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- டெய்லர் கைது

Published On 2022-07-27 04:27 GMT   |   Update On 2022-07-27 04:27 GMT
  • தாமோதரன் மாணவி பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும்போது பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.
  • நாளுக்கு நாள் தாமோதரனின் காதல் டார்ச்சர் அதிகரிக்கவே, மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார்.

திருப்பூர்:

திருப்பூர் கோல்டன் நகர் கருணாகர பிரிவு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 25), டெய்லர். இவர் அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி காதலிக்க மறுத்து விட்டார். இருப்பினும் தாமோதரன் மாணவி பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும்போது பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.

நாளுக்கு நாள் தாமோதரனின் காதல் டார்ச்சர் அதிகரிக்கவே, மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் தாமோதரனுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போது உள்ளே புகுந்த தாமோதரன் மாணவியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி தாமோதரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News