உள்ளூர் செய்திகள்

ராமாபுரத்தில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது சுருண்டு விழுந்து வாலிபர் மரணம்

Published On 2022-11-01 08:26 GMT   |   Update On 2022-11-01 08:26 GMT
  • குந்தன் குமார் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
  • ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் குந்தன்குமார் (வயது27). இவர் சென்னை ராமாபுரம் சாந்தி நகரில் நண்பர்களுடன் தங்கி அதே பகுதியில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை குந்தன் குமார் செல்போனில் தனது பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி சுருண்டு கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக குந்தன் குமாரை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குந்தன் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். குந்தன் குமார் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News