உள்ளூர் செய்திகள்

கேளம்பாக்கம் அருகே பாழடைந்த கட்டிடத்தில் ஆண் பிணம்- கொலை செய்யப்பட்டாரா?

Published On 2023-01-10 14:00 IST   |   Update On 2023-01-10 14:00:00 IST
  • கேளம்பாக்கத்தை அடுத்த படூர் பழைய மாமல்லபுரம் சாலையில் பாழடைந்த கட்டிடம் உள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்போரூர்:

கேளம்பாக்கத்தை அடுத்த படூர் பழைய மாமல்லபுரம் சாலையில் பாழடைந்த கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. மர்ம நபர்கள் அவரை கடத்தி கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News