உள்ளூர் செய்திகள்

காதலித்து ஏமாற்றியதால் சின்னமனூர் போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணா

Published On 2023-07-31 04:33 GMT   |   Update On 2023-07-31 04:33 GMT
  • விஜயின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டதாக தெரிவித்தனர்.
  • அதிர்ச்சி அடைந்த சித்ரா தன்னை ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்க கோரி சின்னமனூர் போலீஸ் நிலையம் முன்பு தனது வக்கீலுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சித்ரா (வயது21). தனியார் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மார்க்கையன்கோட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வாத்து என்ற விஜய் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 5 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். சித்ராவை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பல்வேறு கட்டங்களாக பணம், நகையை வாங்கி உள்ளார். இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் ரூ.2 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு தேனி சென்று வருவதாக கூறிய விஜய் அதன் பின்னர் இவரை சந்திப்பதை தவிர்த்துள்ளார். செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. விஜயின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ரா தன்னை ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்க கோரி சின்னமனூர் போலீஸ் நிலையம் முன்பு தனது வக்கீல் ஜகன்ராஜூவுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

போலீசார் அவரை சமரசம் செய்ததால் போராட்டத்தை கைவிட்டார். இது தொடர்பாக விஜய் அவரது தாய் தமிழ்ச்செல்வி, உறவினர் லதா உள்பட 5 பேர் மீதுபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News