உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

Published On 2022-12-03 13:59 IST   |   Update On 2022-12-03 13:59:00 IST
  • தன் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய தந்தை முனுசாமி திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி:

திருத்தணி அடுத்த அகூர் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மாலினி (வயது 18). இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் மாலினி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு மணி நேரம் கழித்து வீட்டில் உள்ள உறவினர்கள் அதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து மாலினி உடலை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை நடத்தி வருவதாகவும், ஒற்றுமையாக வாழ முடியாமல் தவித்ததாகவும், இதனால் மனமுடைந்து மாலினி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தன் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய தந்தை முனுசாமி திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Similar News