உள்ளூர் செய்திகள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற குருவி மலர்கள்

Published On 2024-03-23 05:40 GMT   |   Update On 2024-03-23 05:40 GMT
  • பூ பார்ப்பதற்கு குருவி போன்ற தோற்றம்.
  • குருவி தனது தலையை ஆட்டுவது போல இருப்பது இந்த பூவின் விசேஷமாகும்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற குருவி வடிவிலான மலர்கள் தற்போது அதிக அளவில் பூத்துள்ளது. மேலும் இந்த பூ பார்ப்பதற்கு குருவி போன்ற தோற்றம் கொண்டு இருப்பதால் குருவிப்பூ என (குரெட்டலேரியா) என அழைக்கபடுகின்றது.

மேலும் இந்த பூவானது மரத்தில் மலரக்கூடியதும், மரத்தில் உள்ள கிளையில் குருவி அமர்ந்து 2 பக்கம் இறக்கையை விரித்து பறப்பது போலவும் இயற்கையாக அமைந்துள்ளது.

மேலும் இந்த பூவின் அடி பகுதியில் மகரந்த தாள் பகுதி நூல் போன்று அமைந்துள்ளதை பிடித்து இழுக்கும் போது குருவி தனது தலையை ஆட்டுவது போல இருப்பது இந்த பூவின் விசேஷமாகும்.


இந்த பூவின் நடுப்பகுதியில் தேன் இருந்தும், அதனை தேனீக்கள் எடுக்கமுடியாதவாறு இதழ்கள் மூடி காணப்படுவதால் தேனை எடுக்கமுடியாமல் தேனீக்கள் ஏமாற்றமடைகிறது.

மேலும் இவ்வகையான அபூர்வ வகை குருவி மலர்கள் தற்போது கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மஞ்சள் நிறத்தில் பூத்து குலுங்குகின்றன. இதனையடுத்து பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் இந்த பூக்களை கண்டு ரசிப்பதுடன் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Tags:    

Similar News