உள்ளூர் செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி

Published On 2022-10-17 12:26 IST   |   Update On 2022-10-17 12:26:00 IST
  • கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு, வில்லியர் காலனியை சேர்ந்தவர் கோபி.
  • பள்ளி மாணவர்களான அண்ணன்-தம்பி இருவரும் பாம்பு கடித்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு, வில்லியர் காலனியை சேர்ந்தவர் கோபி (வயது 32), கூலித்தொழிலாளி.

இவர் கடந்த 11-ந்தேதி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் அருகே நடந்து வந்தார். அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று கோபியை கடித்து சென்று விட்டது. இதில் உடல்நிலை மோசமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கோபி பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகம் அடைந்து உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி எஸ்.பி.கோவில் தெருவை சேர்ந்த பள்ளி மாணவர்களான அண்ணன்-தம்பி இருவரும் பாம்பு கடித்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News