உள்ளூர் செய்திகள்

மது குடித்ததை தாய் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

Published On 2023-11-07 09:23 GMT   |   Update On 2023-11-07 09:23 GMT
  • தாய்-மகன் இடையே தகராறு ஏற்பட்டது.
  • மனமுடைந்த கோகுல் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவொற்றியூர்:

திருவொற்றியூர் எஸ்.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் குட்டியம்மா. இவரது மகன் கோகுல் (வயது 24) வெல்டரான இவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர். நேற்று இரவு வழக்கம்போல் கோகுல் மதுகுடித்து வீட்டுக்கு வந்தார். இதனை குட்டியம்மா கண்டித்தார்.இதனால் தாய்-மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கோகுல் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

Similar News