உள்ளூர் செய்திகள்

சமூகவலைதளங்களில் ஆபாச படங்களை பரப்பிய கள்ளக்காதலி எரித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

Published On 2023-03-01 07:24 GMT   |   Update On 2023-03-01 07:24 GMT
  • சமூகவலைதளங்களில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட கள்ளக்காதலியை வாலிபர் தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பிரேமா மரணத்திற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பாப்பினி வரதப்பம்பாளையம் காலனியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி பிரேமா (வயது 30). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேமா கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வரதப்பம்பாளையம் காலனியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். மேலும் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் பிரேமாவுக்கும் காங்கயம் நத்தக்காடையூர் பாரதியார்நகர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விஜய் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

நேற்று பிரேமா வீட்டிற்கு விஜய் சென்றார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து விஜய் அங்கிருந்து சென்ற நிலையில், பிரேமா உடலில் தீப்பற்றிய நிலையில் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். பின்னர் பிரேமா மீது பற்றிய தீயை அணைத்து, சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பிரேமா இறந்தார். அப்போது அவர் போலீசாரிடம் மரண வாக்குமூலம் அளித்தார். அதில் விஜய், தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பிரேமா மரணத்திற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

பிரேமா கணவரை விட்டு பிரிந்ததும் விஜய்யுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகியதுடன் தனியாக சந்தித்து உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் விஜய்க்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையறிந்த பிரேமா அதிர்ச்சியடைந்தார். இது பற்றி அவர் விஜய்யிடம் தட்டிக்கேட்டார். அப்போது விஜய் தனக்கு திருமணம் ஆனாலும் உன்னையும் பார்த்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அதனை பிரேமா ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் விஜய்யை பழிவாங்க நினைத்த அவர், இருவரும் பழகிய போது நெருக்கமாக இருந்த ஆபாச புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இதைப்பார்த்த விஜய் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து நேற்று பிரேமா வீட்டிற்கு சென்ற விஜய், எப்படி புகைப்படங்களை சமூகவலைதளங்களில பதிவிடலாம் என தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் விஜய், பிரேமா மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. விஜய் போலீசாரிடம் கூறும்போது, தான் தீ வைக்கவில்லை என்றும், பிரேமாவே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

சமூகவலைதளங்களில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட கள்ளக்காதலியை வாலிபர் தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News