உள்ளூர் செய்திகள்

அண்ணாநகரில் பிரபல பெண் கஞ்சா வியாபாரி கைது

Published On 2023-09-22 14:37 IST   |   Update On 2023-09-22 14:37:00 IST
  • வேலழகி அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக அண்ணாநகர் மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • வேலழகி மீது பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 55 வழக்குகள் உள்ளது.

ராயபுரம்:

புளியந்தோப்பு, கே.பி. பூங்காவை சேர்ந்தவர் வேலழகி (65). பிரபல கஞ்சா வியாபாரி. இவர் மீது பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 55 வழக்குகள் உள்ளது.

இந்தநிலையில் வேலழகி அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக அண்ணாநகர் மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று வேலழகியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான வேலழகி போலீசாரின் பட்டியலில் "பி" பிரிவு ரவுடியாகவும் உள்ளார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News