உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல்- பெண் கைது

Published On 2024-04-15 09:41 GMT   |   Update On 2024-04-15 09:41 GMT
  • ஒரு கடையில் இருந்த மூட்டையை திறந்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு இடையார்குப்பத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் நடுவீரப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் ஒரு கடையில் இருந்த மூட்டையை திறந்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் கடையின் உரிமையாளர் இடையார் குப்பத்தை சேர்ந்த குணசுந்தரி (வயது 30) என்பதும், மூட்டையில் சுமார் 750 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரமாகும். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து குணசுந்தரியை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News