உள்ளூர் செய்திகள்

கொருக்குப்பேட்டை அருகே லாரி மோதி காவலாளி பலி

Published On 2022-10-19 09:18 GMT   |   Update On 2022-10-19 09:18 GMT
  • கொருக்குப்பேட்டை, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சம்பத்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவர் எழிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராயபுரம்:

கொருக்குப்பேட்டை, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சம்பத் (வயது55). காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று இரவு அவர் வேலை முடிந்து எண்ணூர் நெடுஞ் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஐ.ஒ.சியில் இருந்து ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சம்பத் பலியானார்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவர் எழிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News