உள்ளூர் செய்திகள்

பெரியபாளையம் அருகே கைப்பந்து வீரர் கொலை- 3 பேர் கைது

Published On 2022-10-25 12:04 IST   |   Update On 2022-10-25 12:04:00 IST
  • தண்டு மாநகர் பகுதியை சேர்ந்தவர் சரத் கைப்பந்து வீரர்.
  • சின்னமணியின் கூட்டாளிகளான சரண், மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையம், தண்டு மாநகர் பகுதியை சேர்ந்தவர் சரத்(வயது22) கைப்பந்து வீரர். இவர் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆரணி போலீசார் ஆரணி இருளர் காலனியை சேர்ந்த சின்ன மணியை கைதுசெய்தனர். விசாரணையில் கஞ்சா மற்றும் பெண் தகராறு காரணமாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக சின்னமணியின் கூட்டாளிகளான சரண், மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலையை தொடர்ந்து ஆரணியில் உள்ள சின்னமணியின் சால்னா கடை நொறுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News