சாலையில் அமர்ந்து சாப்பிட்ட கிராமமக்கள்
- குடிநீர் மற்றும் உணவு வழங்க சரக்கு ஆட்டோ ஏற்பாடு செய்து இருந்தனர்.
- கிராமமக்கள் சாலையோரத்தில் அமர்ந்த படி சாப்பிட்டனர்.
பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் மீனவ கிராம மக்களுடன் ஏற்பட்ட தகராறில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கூனங்குப்பம் கிராமமக்கள் இன்று காலை வீடுகளை காலி செய்து விட்டு குடும்பத்துடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட நடைபயணமாக சென்றனர்.
அதிகாலை முதலே சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாரை சாரையாக சாலையில் நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு வழங்க சரக்கு ஆட்டோ ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் முழுவதும் உணவு பொட்டலங்கள் குடிநீர் நிரப்பப்பட்டு இருந்தது. போராட்டத்துக்கு வந்த அனைவருக்கும் அவை வழங்கப்பட்டன.
கிராமமக்கள் சாலையோரத்தில் அமர்ந்த படி சாப்பிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்று கூறி நடைபயணத்தை தொடர்ந்தனர். நடைபயணத்தின் போது அவர்கள் போக்குவரத்துக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தாமல் சென்றனர்.