உள்ளூர் செய்திகள்
பூந்தமல்லி அருகே வேன்கள் மோதல- 10 பேர் காயம்
- சென்னை நோக்கி வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியதில் இரண்டு வேனின் முன்பகுதியும் நொறுங்கியது.
- வேனில் பயணம் செய்த டிரைவர்கள் உள்பட 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பூந்தமல்லி:
பூந்தமல்லி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை ஏற்றி கொண்டு சென்னை நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் ஒன்று போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததால் அந்த பகுதியில் சாலையின் எதிர் திசையில் சென்றது.
அப்போது சென்னை நோக்கி வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியதில் இரண்டு வேனின் முன்பகுதியும் நொறுங்கியது. இதில் வேனில் பயணம் செய்த டிரைவர்கள் உள்பட 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.