உள்ளூர் செய்திகள்

வடிவேலுவுக்கும் கூட்டம் வந்தது- கார்த்தி சிதம்பரம்

Published On 2023-11-11 12:40 IST   |   Update On 2023-11-11 12:40:00 IST
  • அண்ணாமலைக்கு வருவதை விட அதிகமான கூட்டம் நடிகர் வடிவேலுக்கு வந்தது உண்டு.
  • எங்களால் ஓரளவுக்கு தான் செயல்பட முடியும்.

காங்கிரஸ் எம்.பி.கார்த்தி ப.சிதம்பரம் கூறியதாவது:-

அரசியலில் அண்ணாமலைக்கு கூட்டம் வருவதை வைத்து அவ்வளவும் ஓட்டாக மாறி விடும் என்று நினைக்க முடியாது. அண்ணாமலைக்கு வருவதை விட அதிகமான கூட்டம் நடிகர் வடிவேலுக்கு வந்தது உண்டு. தி.மு.க.வுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்த போது வந்த கூட்டத்தை பார்த்து நானே அசந்து இருக்கிறேன். அந்த அளவுக்கு கூட்டத்தை வேறு யாருக்கும் நான் பார்த்ததில்லை. ஆனால் என்னாச்சு? எனவே அண்ணாமலைக்கு வரும் கூட்டம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்ப முடியாது.

ஏனென்றால் தமிழ்நாட்டில் பா.ஜனதாவை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனக்கும் ஒரு ஆசை உண்டு. காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக வேண்டும் என்ற சின்ன ஆசை. அதை விட பெரிய ஆசை ஆட்சி செய்ய வேண்டும் என்றும் இருக்கிறது. சினிமா துறையில் இருப்பவர்கள் கூட முதல்வராக ஆசைப்படும் போது இத்தனை ஆண்டு காலம் அரசியலில் இருக்கும் எனக்கும் அந்த ஆசை வரத்தானே செய்யும்? ஆனால் அதற்கான காலமும், நேரமும் இருக்க வேண்டும். என்னால் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க முடியும். அண்ணாமலை தமிழகத்திற்கு என்று என்ன திட்டம் வைத்துள்ளார். எந்த பாதையில் தமிழகத்தை நடத்தப்போகிறார். அது பற்றி அவர் என்ன சொல்லி இருக்கிறார். இப்போது அவர் அதிகமாக பேசப்படுவதற்கு காரணம் எதிர் கட்சியான அ.தி.மு.க. மவுனமாக இருப்பதால் பா.ஜனதா செய்வதெல்லாம் எடுபடுகிறது. எங்களை பொறுத்தவரை எதிர் கட்சியும் இல்லை, ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கிறோம். எனவே எங்களால் ஓரளவுக்கு தான் செயல்பட முடியும். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ரவுடிகள் பா.ஜனதாவில் தான் இருக்கிறார்கள். அவர்களை வைத்துக்கொண்டு தான் நல்லாட்சியை தரப்போகிறார்களா?

Tags:    

Similar News