உள்ளூர் செய்திகள்

வடவள்ளி அருகே கள்ளக்காதலனுடன் இருந்த பெண் மரணம்

Published On 2023-07-09 05:20 GMT   |   Update On 2023-07-09 05:20 GMT
  • மகள்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
  • வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

பெண் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து மகள்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு, திருமணமாகாத 35 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. மகள்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

சம்பவத்தன்று பெண்ணின் மகள்கள் வெளியே சென்று இருந்தனர். அப்போது வாலிபர் பெண்ணின் வீட்டிற்கு வந்தார். பின்னர் காலை 10 மணியளவில் பெண் தனது கள்ளக்காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார்.

மாலையில் தனது கள்ளக்காதலனுடன் வீட்டில் இருந்த பெண் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாலிபர் கதறி அழுதார்.

அப்போது வெளியே சென்று இருந்த பெண்ணின் மகள்கள் வீட்டிற்கு திரும்பினர். அவர்கள் தனது தாய் மயங்கி கிடப்பது கண்டு அதிர்ச்சிய டைந்தனர். மேலும் அவரது அருகில் வாலிபர் அழுது கொண்டு இருப்பதை பார்த்தனர்.

உடனடியாக மகள்கள் பெண்ணை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பெண்ணை பரிசோதை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News