உள்ளூர் செய்திகள்

உடுமலையில் முதியவர் கொலை- கொலையாளிகளை பிடிக்க தனிப்படை தீவிர வேட்டை

Published On 2023-07-14 05:48 GMT   |   Update On 2023-07-14 05:48 GMT
  • சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பூலாங்கிணரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 77).சம்பவத்தன்று இரவு உடுமலை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் முக்கோணம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தின் முன்பு சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இது குறித்து பொது மக்கள் உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ் கண்ணா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் சுப்பிரமணி தலையில் ஹாலோ பிளாக் கல்லை போட்டு மர்ம நபர் கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்த மர்மநபர் யார்? எதற்காக கொலை செய்தார் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொலையாளியை பிடிக்க திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன், உடுமலை டி.எஸ்.பி., சுகுமார் உத்தரவின் பேரில் உடுமலை இன்ஸ்பெக்டர் ராஜ் கண்ணா, மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் ராேஜஷ் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News