உள்ளூர் செய்திகள்
செங்கல்பட்டு சரக கூட்டுறவு பணியாளர்களுக்கு பயிற்சி
- காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மு.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
- ஓய்வு பெற்ற கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குநர் ஜெயராமன் ஆகியோர் கூட்டுறவு பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் செயலாட்சியராக நியமிக்கப்பட்டுள்ள கூட்டுறவு துறை பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ம.தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மு.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பயிற்சியில் செங்கல்பட்டு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ம.சுடர்விழி, மதுராந்தகம் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதி வாளர் பா.ஐஸ்வர்யா, கூட்டுறவு சார்பதிவாளர், முதுநிலை ஆய்வாளர்கள் மற்றும் இளநிலை ஆய்வாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். ஓய்வு பெற்ற கூட்டுறவு சார்பதிவாளர் மாணிக்கவேல், ஓய்வு பெற்ற கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குநர் ஜெயராமன் ஆகியோர் கூட்டுறவு பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.