உள்ளூர் செய்திகள்

உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில் போக்குவரத்து சேவையில் பாதிப்பு

Published On 2023-10-21 15:02 IST   |   Update On 2023-10-21 15:02:00 IST
  • பெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
  • ஈரோட்டில் இருந்து கிளம்பிய கூட்ஸ் ஒன்றும் நிறுத்தப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆனங்கூர் ரெயில் நிலையம் அருகே உயர் மின்னழுத்த கம்பி இன்று காலை திடீரென அறுந்து விழுந்தது.

இதனால் இந்த வழியாக வந்த சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பாதை வழியில் நிறுத்தப்பட்டது. இதேபோல் பெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. மேலும் ஈரோட்டில் இருந்து கிளம்பிய கூட்ஸ் ஒன்றும் நிறுத்தப்பட்டது.

இதனால் இந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து ஈரோடு ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அறுந்து விழுந்த கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணி சிறிது நேரத்தில் முடிவடைந்து வழக்கம் போல் ரெயில் சேவை தொடர்ந்து நடைபெறும் என ரெயில்வே நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News