உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்- டிரைவர் கைது

Published On 2022-10-08 12:40 IST   |   Update On 2022-10-08 12:40:00 IST
  • திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • போலீசார் டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

திருத்தணி:

திருத்தணி அடுத்த மத்தூர் பகுதியில் திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநில எல்லையில் இருந்து திருத்தணி நோக்கி டிராக்டர் ஒன்று அதிவேகமாக வந்தது. போலீசார் டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். டிராக்டரை ஓட்டி வந்தவரிடம் மணல் ஏற்றிச்செல்வதற்கான அனுமதி உள்ளதா என கேட்டபோது அவரிடம் அனுமதி எதுவும் இல்லை. இதனால் டிராக்டரில் மணல் சட்டவிரோதமாக கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம் நகரி அடுத்த எஸ்.வி.புரம் பகுதியை சேர்ந்த லோகையா (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

Similar News