உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் கடலில் குளித்த போது மனைவி கண் எதிரே மயங்கி விழுந்து பலியான வடநாட்டு சுற்றுலா பயணியை படத்தில் காணலாம்.

கன்னியாகுமரியில் கடலில் குளித்த சுற்றுலா பயணி மயங்கி விழுந்து பலி

Published On 2023-01-08 16:04 IST   |   Update On 2023-01-08 16:04:00 IST
  • சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் உள்ள சன்செட் பாயிண்ட் கடலில் குளித்து உள்ளனர்.
  • கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கன்னியாகுமரி:

மத்தியபிரதேசம் மாநிலம் தார் திரியா பகுதியைச் சேர்ந்தவர் மதன்சிங் தாகூர் (வயது 72).

இவர் மனைவி நர்மதா தாகூர் உள்பட 120 பேருடன் 2 பஸ்களில் நேற்று மதியம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

அதன்பிறகு அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள சன்செட் பாயிண்ட் கடலில் குளித்து உள்ளனர். அப்போது "திடீர்"என்று மதன்சிங் தாகூர் தனது மனைவி கண் எதிரே மயங்கி விழுந்து உள்ளார்.

இதை பார்த்து அவரது மனைவி மற்றும் அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் மதன் சிங் தாகூர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News