உள்ளூர் செய்திகள்

திருவொற்றியூரில் மாஞ்சா நூலில் சிக்கிய காகத்தை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

Published On 2023-06-04 09:36 GMT   |   Update On 2023-06-04 09:36 GMT
  • திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • தீயணைப்பு வீரர்கள் பெரிய ஏணி மூலம் மாஞ்சா நூலில் சிக்கிய காகத்தை பத்திரமாக மீட்டனர்.

திருவொற்றியூர், காலடிப்பேட்டை வன்னியர் தெருவில் உள்ள மரத்தில் அறுந்து தொங்கிய மாஞ்சா நூலில் ஒரு காகம் சிக்கி உயிருக்கு போராடியது.

இது குறித்து அவ்வழியே சென்ற குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் காகத்தை காப்பாற்ற முயன்றார். ஆனால் அந்த காகம் மரத்தில் சுமார் 35 அடி உயரத்தில் தொங்கியதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதுகுறித்து திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பெரிய ஏணி மூலம் மாஞ்சா நூலில் சிக்கிய காகத்தை பத்திரமாக மீட்டனர். பின்னர் அதற்கு முதல் உதவி சிகிச்சை அளித்து பறக்க விட்டனர்.

Tags:    

Similar News