உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே குட்கா போதைப்பொருள் விற்றவர் கைது

Published On 2022-12-03 14:18 IST   |   Update On 2022-12-03 14:18:00 IST
  • திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத் தெருவில் பாண்டியன்.
  • போதைப் பொருளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தில் தொடர்ந்து குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத் தெருவில் பாண்டியன் (வயது 30) என்பவர் தன்னுடைய கடையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போதைப் பொருளை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News