உள்ளூர் செய்திகள்

பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஆந்திர துணை நடிகைகள்: நெல்லை-காஞ்சிபுரம் வாலிபர்கள் கைது

Published On 2023-09-22 10:17 GMT   |   Update On 2023-09-22 10:17 GMT
  • வேளச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும் ஆபாச அழைப்புகள் மூலம் வாலிபர்கள் வளைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
  • வேளச்சேரி தேவி கருமாரியம்மன் நகரில் உள்ள வீட்டில் விபசார தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

சென்னை:

சென்னையில் பாலியல் தொழிலை கட்டுப்படுத்த விபசார தடுப்புப் பிரிவு போலீசார் தொடர்ந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் வெளிமாநிலங்களில் இருந்து படையெடுக்கும் அழகிகள் சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்தோ அல்லது விடுதிகளில் தங்கி இருந்தோ பாலியல் தொழிலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் அவ்வப்போது வெளிமாநில அழகிகளை விபசார தடுப்புப் பிரிவு போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து காப்பகத்துக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும் ஆபாச அழைப்புகள் மூலம் வாலிபர்கள் வளைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து வேளச்சேரி தேவி கருமாரியம்மன் நகரில் உள்ள வீட்டில் விபசார தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி மற்றும் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 2 இளம்பெண்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துணை நடிகைகள் என்பது தெரியவந்தது. இருவரையும் மீட்ட போலீசார் இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்பது பற்றி விசாரித்தனர். அப்போது தினேஷ் என்ற வாலிபர் துணை நடிகைகள் மற்றும் அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

அவரை தேடியபோது தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். தரகர்களாக செயல்பட்ட 2 பேர் சிக்கினர். அவர்களில் ஒருவரது பெயர் சுமியோன் ஜார்ஜ், நெல்லையை சேர்ந்தவர். இன்னொருவர் காளிதாஸ் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஆவார்.

இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர துணை நடிகைகளை போன்று வேறு அழகிகள் யாரையும் இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News