உள்ளூர் செய்திகள்

திருமங்கலத்தில் காதல் கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை

Published On 2023-02-26 06:15 GMT   |   Update On 2023-02-26 06:16 GMT
  • ஓராண்டுக்கு முன்பு பாண்டியராஜா மகளையும், மருமகனையும் தனது வீட்டு மாடியில் குடிவைத்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்:

திருமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜா. சமையல் வேலை செய்கிறார். இவரது மகள் பாண்டீஸ்வரி(21). 2 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஜி.ஓ.நகரை சேர்ந்த நவீன்பிரகாஷ் என்பவரை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு குடும்பத்தாரும் இந்த திருமணத்தை ஏற்கவில்லை.ஓராண்டுக்கு முன்பு பாண்டியராஜா மகளையும், மருமகனையும் தனது வீட்டு மாடியில் குடிவைத்தார். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற நவீன் பிரகாஷ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

மேலும் பாண்டீஸ்வரி தன்னை துன்புறுத்துவதாக திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தபோது நீதிமன்றம் சென்று பிரச்சினையை தீர்த்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து பாண்டீஸ்வரி விரக்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டீஸ்வரி, கணவர் நவீன்பிரகாஷ் வீட்டு முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பாண்டீஸ்வரியின் தந்தை பாண்டியராஜா அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News