உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பெண் பலி

Published On 2023-08-04 15:06 IST   |   Update On 2023-08-04 15:06:00 IST
  • சுலோச்சனா மின்சாரம் தாக்கி பலியானார்.
  • பலத்த காயம் அடைந்த மாணவன் சபரிவாசனுக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது50). இவரது பேரன் சபரிவாசன்(13).

அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தினந்தோறும் சுலோச்சனா பேரனை பள்ளிக்கு செல்ல வெளியே அழைத்து வந்து விட்டு அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலையும் வழக்கம் போல் சுலோச்சனா, பேரன் சபரிவாசனுடன் அதே பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது மின்கம்பத்தில் இருந்த உயர்மின்அழுத்த கம்பி திடீரென அறுந்து சுலோச்சனா மீது விழுந்தது. இதில் சுலோச்சனா மின்சாரம் தாக்கி பலியானார். அருகில் நின்ற சபரிவாசனும் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னரே மின்வாரிய அதிகாரிகள் வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்ததும் திருக்கழுக்குன்றம் போலீசார் விரைந்து பலியான சுலோச்சனாவின் உடலை மீட்டு பிரசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த மாணவன் சபரிவாசனுக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News