உள்ளூர் செய்திகள்
- ஒரு வீட்டுக்குள் மர்ம வாலிபர் ஒருவர் குடிபோதையில் புகுந்தார்.
- திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர், ஜே,என் சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குள் மர்ம வாலிபர் ஒருவர் குடிபோதையில் புகுந்தார். அவரை அப்பகுதி மக்கள் மடிக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பதும் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.