உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் முன்விரோதத்தில் வாலிபருக்கு அடி உதை

Published On 2022-07-16 13:43 IST   |   Update On 2022-07-16 13:43:00 IST
  • தென்காசி மாவட்டம் கக்கஞ்சி மேற்கு தெருவை சேர்ந்தவர் புகழேந்தி.
  • திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

திருவள்ளூர்:

தென்காசி மாவட்டம் கக்கஞ்சி மேற்கு தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (32). இவர் திருவள்ளூரில் தங்கி வேலை செய்து வருகிறார்.

புகழேந்தி திருவள்ளூரில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த திருவள்ளூர் காந்திபுரம் ஜே.என். ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் (32) ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன் பகையை மனதில் வைத்துக்கொண்டு புகழேந்தியை தகாத வார்த்தைகள் பேசி அவரை வாய் மீது இரும்பு கம்பியால் குத்தினார்.

இதில் பலத்த காயமடைந்த அவருக்கு 3 பல் உடைந்தது. இது குறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி வழக்கு பதிவு செய்து தினேசை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News