உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-01-02 12:00 IST   |   Update On 2023-01-02 12:00:00 IST
  • திருத்தணி அடுத்த அம்மையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருத்தணி அடுத்த அம்மையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். (வயது36). இவர் பிள்ளைபாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் பிள்ளைபாக்கத்தில் இருந்து அம்மையார்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருவள்ளூர் ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது நாய் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே சென்றது. இதனால் அருணாச்சலம் திடீர் பிரேக் போட்டார். இதில் நிலைதடுமாறிய அருணாச்சலம் மோட்டார் சைக்கிளோடு தவறி கீழே விழுந்தார்.

பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் உயிர் இழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த சீதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்யா (40). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த மாதம் 19 -ந் தேதி மோட்டார் சைக்கிளில் திருத்தணிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருவள்ளூரை அடுத்து கைவண்டூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோத கட்டுப்பாட்டை இழந்த சத்யா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார்.

தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சத்யா சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார்.

Similar News