உள்ளூர் செய்திகள்

திருவாலங்காடு அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-10-08 12:37 IST   |   Update On 2022-10-08 12:37:00 IST
  • மதியம் உணவு இடைவேளையின் போது திரும்பி வந்து பார்த்தப் போது வாகனம் திருட்டு போனது தெரியவந்தது.
  • திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருத்தணி:

திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இங்கு ஆலை பராமரிப்பு ஊழியராக பணிபுரிபவர் தங்கவேலு 55. இவர் பழையனூரை சேர்ந்தவர். நேற்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஆலைக்கு பணிக்கு வந்தார்.

வாகனத்தை ஆலைக்கு வெளியே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி சென்றார். மதியம் உணவு இடைவேளையின் போது திரும்பி வந்து பார்த்தப் போது வாகனம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து தங்கவேலு திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வாகனத்தை திருடியவரை தேடி வருகின்றனர்.

Similar News