உள்ளூர் செய்திகள்

7-வது ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி திருத்தணி கோவில் ஊழியர்கள் உண்ணாவிரதம்

Published On 2023-03-28 15:30 IST   |   Update On 2023-03-28 15:31:00 IST
  • கோவில் பணியாளர்கள் 6 வருடங்களாக கோவில் நிர்வாகத்திடம் 7-வது ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
  • ஒவ்வொரு பணியாளருக்கும் சுமார் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை நிலுவைத்தொகை வர வேண்டி உள்ளது.

திருத்தணி:

திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு திருவாலங்காடு,மத்தூர், நாகப்பூண்டி, திருப்பாச்சூர் உள்ளிட்ட 28 இடங்களில் உப கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவில் ஊழியர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 7-வது ஊதிய குழு அமல்படுத்தப்பட வில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து கோவில் பணியாளர்கள் 6 வருடங்களாக கோவில் நிர்வாகத்திடம் 7-வது ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு பணியாளருக்கும் சுமார் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை நிலுவைத்தொகை வர வேண்டி உள்ளது.

இதைத்தொடர்ந்து 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி திருத்தணி கோவில் ஊழியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருத்தணி கமலா திரையரங்கம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

Similar News