உள்ளூர் செய்திகள்

தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

Published On 2023-07-03 13:42 IST   |   Update On 2023-07-03 13:42:00 IST
  • தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
  • தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம்:

மேடவாக்கம் அடுத்த ஜல்லடியான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 45). எலக்ட்ரீசியன். இவர் தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம், கருணாநிதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குளிர்சாதன பெட்டிக்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றார்.

அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தசாமி பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News