உள்ளூர் செய்திகள்

30 வயதாகியும் திருமணமாகாததால் விரக்தி- சேலத்தில் ஸ்டேட் பாங்கி ஊழியர் தற்கொலை

Published On 2022-10-18 04:32 GMT   |   Update On 2022-10-18 04:32 GMT
  • சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியில் வீடு எடுத்து தனியாக தங்கியிருந்த அனிதாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
  • 30 வயதாகியும் திருமணமாகவில்லையே என்ற விரக்தியில் இருந்த அனிதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

சேலம்:

தருமபுரி நகர பகுதிக்குட்பட்ட குமாரசாமி பேட்டையை சேர்ந்தவர் அனிதா (வயது 30). இவர் சேலம் அம்மாப்பேட்டை ஸ்டேட் பாங்கியில் கிளர்க்காக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியில் வீடு எடுத்து தனியாக தங்கியிருந்த அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 30 வயதாகியும் திருமணமாகவில்லையே என்ற விரக்தியில் இருந்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே பதறியபடி அங்கிருந்து ஓடி வந்த உறவினர்கள் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனிதாவை சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனிதா இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News